ADDED : மே 01, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 70. தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு 7:30 மணியளவில், கீழக்கரணை பேருந்து நிறுத்தம் பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற 'ஸ்பிளெண்டர்' பைக் மோதியதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பைக்கில் வந்த நபர் படுகாயமடைந்த நிலையில், அங்கிருந்தோர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.