ADDED : ஆக 19, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், பேரப்பிள்ளைகளை பள்ளியில் விடச்சென்ற முதியவர், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
குன்றத்துார், சேக்கிழார் நகரைச் சேர்ந்தவர் நடராஜன், 76. இவர், பேரப்பிள்ளைகள் இருவரை, நேற்று காலை குன்றத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விட்டுவிட்டு, பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதிக்கு நடந்து சென்றார்.
அப்போது மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.
குன்றத்துார் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.