sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு '7 ஆண்டு'

/

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு '7 ஆண்டு'

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு '7 ஆண்டு'

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு '7 ஆண்டு'


ADDED : ஆக 06, 2025 02:41 AM

Google News

ADDED : ஆக 06, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.

சென்னை, சேலையூர் மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இதே பகுதியைச் சேர்ந்த ஹக்கிம்சேட், 59, என்பவர், 2023 மே 29ம் தேதி, சிறுமியை தன் வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

அப்போது, சிறுமி ஹக்கிம்சேட்டின் கையை கடித்து விட்டு, தப்பிச் சென்றார். பின், இதுகுறித்து தன் பெற்றோரிடம் கூற, அவர்கள் சேலையூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹக்கிம்சேட்டை போக்சோ வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஹக்கிம்சேட்டுக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பு அளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 2 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us