/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயிலில் அடிபட்டு மின்வாரிய ஊழியர் பலி
/
ரயிலில் அடிபட்டு மின்வாரிய ஊழியர் பலி
ADDED : நவ 24, 2024 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், மணிகண்டபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதி காமாட்சி, 42; மின் கணக்கீட்டாளர்.
கணவர் இறந்த நிலையில் உறவினர் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.