sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

லாரி மோதி ஊழியர் பலி

/

லாரி மோதி ஊழியர் பலி

லாரி மோதி ஊழியர் பலி

லாரி மோதி ஊழியர் பலி


ADDED : பிப் 02, 2025 08:08 PM

Google News

ADDED : பிப் 02, 2025 08:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள்கோவில:விருதுநகர் மாவட்டம், கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், 24, சிங்கபெருமாள் கோவில் ஜெ.ஜெ. நகர் பகுதியில் தங்கி உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்த வந்தார்.

நேற்று மதியம் சிங்கபெருமாள் கோவிலில் திருக்கச்சூர் சாலையில் 'பஜாஜ் பிளாட்டினா' டூ- வீலரில் உணவு டெலிவரி செய்ய சென்றார்.

அப்போது கேரளாவில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்ற கன்டெய்னர் லாரி மோதியதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரான உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜித்து, 61, என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us