sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்கள் நீதிமன்ற உத்தரவால் அகற்றம்

/

ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்கள் நீதிமன்ற உத்தரவால் அகற்றம்

ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்கள் நீதிமன்ற உத்தரவால் அகற்றம்

ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்கள் நீதிமன்ற உத்தரவால் அகற்றம்


ADDED : ஜூலை 21, 2025 01:51 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:நீதிமன்ற உத்தரவையடுத்து, மதுராந்தகம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கோவில்களை இடித்து அகற்றிய நிர்வாகி, சிலைகளை பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்.

மேட்டுப்பாளையத்தில், சனீஸ்வரன், ஈஸ்வரன், அம்மன், அய்யப்பன், விநாயகர் கோவில்கள் இருந்தன.

இந்த கோவில்களை, முருகையன், 55, என்பவர் நிர்வகித்து வந்தார். அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளதாக, சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்றும்படி, ஆறு மாதங்களுக்கு முன், வருவாய் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கோவிலை அகற்றக்கோரி, மதுராந்தகம் வருவாய் துறையினர், கோவில் நிர்வாகி முருகையனிடம், பலமுறை நோட்டீஸ் அளித்தனர்.

இந்நிலையில், நிர்வாகி முருகையன் நேற்று முன்தினம், இரவோடு இரவாக கோவில்களை இடித்து, சிலைகளை பாதுகாப்பாக எடுத்துச் சென்றார். நேற்று அங்கு வந்த பக்தர்கள், கோவில் இடிக்கப்பட்டதால் மிகுந்த வேதனையுடன் சென்றனர்.






      Dinamalar
      Follow us