sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வனப்பகுதியில் குப்பை குவிப்பு அனுமந்தபுரத்தில் அத்துமீறல்

/

வனப்பகுதியில் குப்பை குவிப்பு அனுமந்தபுரத்தில் அத்துமீறல்

வனப்பகுதியில் குப்பை குவிப்பு அனுமந்தபுரத்தில் அத்துமீறல்

வனப்பகுதியில் குப்பை குவிப்பு அனுமந்தபுரத்தில் அத்துமீறல்


ADDED : ஜன 11, 2025 02:23 AM

Google News

ADDED : ஜன 11, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலை, 9 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை.

இந்த சாலையை பயன்படுத்தி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தங்களின் அடிப்படை தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் கொண்டமங்கலம், தென்மேல்பாக்கம், தர்காஸ், சிறுங்குன்றம் உள்ளிட்ட கிராமங்களின் சாலை ஓரம் இருபுறமும், காப்பு காடுகள் உள்ளன.

இந்த காப்பு காடுகள் மற்றும் சாலையோரம் தொடர்ந்து பிளாஸ்டிக் குப்பை, மது பாட்டில்கள், டியூப் லைட்கள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

குப்பை காற்றில் பறப்பதாலும், இந்த குப்பையை பன்றிகள் கிளறுவதாலும் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.

கொட்டப்பட்டுள்ள கழிவு பொருட்களை குரங்கு, மயில் உள்ளிட்ட வன விலங்குகளும் உட்கொள்வதால், அவற்றுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், இரவு நேரங்களில் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீரை கொண்டுவரும் தனியார் கழிவுநீர் லாரிகள், சாலையோரத்தில் வெளியேற்றுகின்றன.

எனவே, வனப்பகுதியில் இதுபோன்று குப்பை மற்றும் கழிவுநீர் கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us