sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நின்ற லாரியில் பைக் மோதி கேளம்பாக்கத்தில் இன்ஜினியர் பலி

/

நின்ற லாரியில் பைக் மோதி கேளம்பாக்கத்தில் இன்ஜினியர் பலி

நின்ற லாரியில் பைக் மோதி கேளம்பாக்கத்தில் இன்ஜினியர் பலி

நின்ற லாரியில் பைக் மோதி கேளம்பாக்கத்தில் இன்ஜினியர் பலி


ADDED : ஜன 21, 2025 09:01 PM

Google News

ADDED : ஜன 21, 2025 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் பாண்டே,29. இவர் சென்னையில் தங்கி, திருப்போரூர் அடுத்த தையூர் சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணியில், பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் சுபம் பாண்டேயும், அவரது நண்பரான சுரேந்தர் குமார்,28, என்பவரும் வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் 'பைக்'கில் சென்றனர்.

பைக்கை சுரேந்தர் குமார் ஓட்டிச் சென்றார். புதுப்பாக்கம் அருகே சென்ற போது, சாலையோரத்தில் நின்ற டாரஸ் லாரி மீது இவர்களது பைக் மோதியது.

இதில், இருவரும் பலத்த காயமடைந்து மயங்கியுள்ளனர். அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், சுபம் பாண்டே ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். சுரேந்தர் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சாலையோரம் லாரியை நிறுத்தி வைத்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுனர் ஆறுமுகம்,49, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us