/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் குளத்தில் விழுந்து வலிப்பு நோயாளி இறப்பு
/
கோவில் குளத்தில் விழுந்து வலிப்பு நோயாளி இறப்பு
ADDED : நவ 27, 2024 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிகுமார், 44. சமையற்காரராக கூலி வேலை செய்து வந்தார். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு, சங்குதீர்த்த குளத்தில் இறங்கியுள்ளார்.
அப்போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு, குளத்தில் விழுந்து இறந்துள்ளார்.
திருக்கழுக்குன்றம் போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை காணாமல் தேடிய மனைவி வாணி, குளத்தில் விழுந்து அவர் இறந்ததை அறிந்து, நேற்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.