/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முன்னாள் படை வீரர்கள் தொழில் துவங்க அழைப்பு
/
முன்னாள் படை வீரர்கள் தொழில் துவங்க அழைப்பு
ADDED : ஜன 28, 2025 07:50 PM
செங்கல்பட்டு:முதல்வரின் 'காக்கும் கரங்கள்' என்ற திட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க, கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தின் வாயிலாக, முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் ஆகியோர் தொழிலதிபர் ஆகலாம். இத்திட்டத்தின் வாயிலாக, தாங்கள் தொழில் துவங்க ஒரு கோடி ரூபாய் வரை, கடனுதவி பெற வழிவகை செய்யப்படும்.
பயனாளிகள் தொழில் தொடங்குவது சம்பந்தமாக, மாவட்ட தொழில் மையம் வாயிலாக, இலவச அறிவுரைகள் வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, தொலைபேசி எண்; 044- 22262023 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.