/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வி.ஏ.ஓ., அலுவலகம் சீரமைக்க எதிர்பார்ப்பு
/
வி.ஏ.ஓ., அலுவலகம் சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 25, 2024 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடந்தாங்கல் ஊராட்சி உள்ளது. இங்கு, பறவைகள் சரணாலயம் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.
தற்போது, கட்டடம் பழமையானதால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. இதனால், கிராம நிர்வாக ஆவணங்களை பாதுகாப்பதில் சிரமமாக உள்ளது.
எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே இடத்தில், கிராம நிர்வாக அலுவலர் கட்டடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.