/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்த மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் மருத்துவ மையம் அமைக்க எதிர்பார்ப்பு
/
சித்த மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் மருத்துவ மையம் அமைக்க எதிர்பார்ப்பு
சித்த மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் மருத்துவ மையம் அமைக்க எதிர்பார்ப்பு
சித்த மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் மருத்துவ மையம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 12, 2024 07:18 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில், சிட்கோ தொழிற்பேட்டை, 1982ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இங்கு, 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து, 50,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
இவ்வளாகத்தில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் இயங்கி வருகிறது.
இங்கு, மருத்துவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். பல்வேறு வகை சித்த, ஆயர்வேத மருந்துகள் இங்கு தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
சிட்கோ வளாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நலன் கருதி, தொழிற்சாலை வளாகத்தின் ஒரு பகுதியில், சித்த மருத்துவ மையம் மற்றும் சித்த மருந்து விற்பனை நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்கனவே, சிட்கோ வளாகத்தில் உள்ள சில தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயன புகை மற்றும் துர்நாற்றத்தால், ஆலத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிவாசிகள், பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
எனவே, இதனை கருத்தில் கொண்டு, அரசு மக்களின் நலன் கருதி, மேற்கண்ட சித்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில், சித்த மருத்துவ மையம் மற்றும் மருந்து விற்பனை நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

