/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதல்வர் மருந்தகம் அமைக்க வரும் 5ம் தேதி வரை நீட்டிப்பு
/
முதல்வர் மருந்தகம் அமைக்க வரும் 5ம் தேதி வரை நீட்டிப்பு
முதல்வர் மருந்தகம் அமைக்க வரும் 5ம் தேதி வரை நீட்டிப்பு
முதல்வர் மருந்தகம் அமைக்க வரும் 5ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : டிச 01, 2024 08:32 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க, வரும் 5ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின விழா உரையில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில், முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, முதல்வர் மருந்தகம் அமைக்க, பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், முதல்வர் மருந்தகம் அமைக்க, www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, அரசு மானியம் 3 லட்சம் ரூபாய், இரண்டு தவணையாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.
பொதுமக்கள் நலன் கருதி, வரும் 5ம் தேதி வரை, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, செங்கல்பட்டு மாவட்ட மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார் தெரிவித்தார்.