/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெருமாட்டுநல்லுாரில் கண் சிகிச்சை முகாம்
/
பெருமாட்டுநல்லுாரில் கண் சிகிச்சை முகாம்
ADDED : டிச 08, 2024 08:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று, இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை, நந்திவரம் - கூடுவாஞ்சேரி பிரைட் லயன்ஸ் சங்கம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து நடத்தின.
இந்த முகாம், நேற்று காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற்றது.
இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர். முகாமில் பங்கேற்ற அனைவருக்கும், கண் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.