sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

போலி மருத்துவர் பாலுாரில் கைது

/

போலி மருத்துவர் பாலுாரில் கைது

போலி மருத்துவர் பாலுாரில் கைது

போலி மருத்துவர் பாலுாரில் கைது


ADDED : டிச 29, 2024 01:54 AM

Google News

ADDED : டிச 29, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், செங்கல்பட்டு அடுத்த பாலுார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 11வயது சிறுவர் நேற்று காலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சிறுவனின் பாட்டியிடம் சிறுவனுக்கு சளி பிடித்து உள்ளது என கூறியதையடுத்து, பாட்டி அவரை மருத்துவர் என, நம்பி சிகிச்சை அளிக்க கூறி உள்ளார்.

அந்த நபர் சிறுவனுக்கு ஊசி வாயிலாக மருந்து செலுத்தி உள்ளார். இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் அந்த நபர் மீது சந்தேகமடைந்து காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார் சிறுவனை ரெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் காஞ்சிபுரம் அடுத்த மின் நகர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த பைரோஸ் கான், 65.என்பதும், போலி மருத்துவரான இவர் இருசக்கர வாகனத்தில் கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளித்து வந்ததும் தெரிந்தது.

மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மலர்விழி அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பைரோஸ் கானை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us