sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

முள்ளிப்பாக்கம் ஏரி நீர்ப்பாசன கால்வாயை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

/

முள்ளிப்பாக்கம் ஏரி நீர்ப்பாசன கால்வாயை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

முள்ளிப்பாக்கம் ஏரி நீர்ப்பாசன கால்வாயை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

முள்ளிப்பாக்கம் ஏரி நீர்ப்பாசன கால்வாயை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை


ADDED : அக் 11, 2025 12:22 AM

Google News

ADDED : அக் 11, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:முள்ளிப்பாக்கம் ஏரி நீர்ப்பாசன கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால், துார்வாரி சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர் ஒன்றியத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 63 ஏரிகள் உள்ளன.

இதில் முள்ளிப்பாக்கம் ஏரி, 250 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரியில், மூன்று மதகுகள் உள்ளன.

இவற்றில், ஒரு மதகின் நீர்ப்பாசன கால்வாய் முள்ளிப்பாக்கம் கிராமத்திற்கும், இரண்டு மதகுகளின் நீர்ப்பாசன கால்வாய்கள் பூயிலுப்பை கிராமத்திற்கும் செல்கின்றன. இந்த மூன்று கால்வாய்கள் மூலமாக, 300 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, முள்ளிப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் 4 கி.மீ., நீர்ப்பாசன கால்வாயை சீரமைக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

கடந்த 2022ம் ஆண்டு, 1 கோடி ரூபாய் செலவில், கால்வாயை துார்வாரி, கான்கிரீட் கால்வாயாக கட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

தற்போது, இந்த நீர்ப்பாசன கால்வாய் இருப்பதற்கான அடையாளமே தெரியாத அளவிற்கு செடிகள், மரங்கள் வளர்ந்து மூடியுள்ளன. எனவே, முள்ளிப்பாக்கம் ஏரி நீர்ப்பாசன கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us