/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை, மதுராந்தகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
செங்கை, மதுராந்தகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
செங்கை, மதுராந்தகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
செங்கை, மதுராந்தகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : மே 20, 2025 12:34 AM
செங்கல்பட்டு, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், மதுராந்தகத்தில், வரும் 22ம் தேதியும், செங்கல்பட்டில் 23ம் தேதியும் நடக்கிகிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம், கோட்ட அளவில், வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடந்து வருகிறது.
இந்த கூட்டம், செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலகத்தில், சப்- கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில், வரும் 23ம் தேதி நடக்கிறது.
மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், வரும் 22ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டங்களில் விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.