/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில்ல் 21, 22 தேதிகளில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
/
செங்கையில்ல் 21, 22 தேதிகளில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
செங்கையில்ல் 21, 22 தேதிகளில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
செங்கையில்ல் 21, 22 தேதிகளில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
ADDED : நவ 19, 2024 06:39 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வருவாய் கோட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், வரும் 21ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
இதேபோல், செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகத்தில், சப்- கலெக்டர் நாராயணசாமி தலைமையில், வரும் 22ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
இந்த கூட்டங்களில், விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.