/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
/
விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
ADDED : ஜூலை 16, 2025 09:34 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கோட்டங்களில், வரும் 21, 22, 24 ஆகிய தேதிகளில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வருவாய் கோட்ட அளவில், சப் - கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, மதுராந்தகம் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், வரும் 21ம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது.
தாம்பரம் வருவாய் கோட்டத்தில், கோட்டாட்சியர் முரளி தலைமையில், வரும் 22ம் தேதி காலை 10:30 மணிக்கு கூட்டம் நடக்கிறது.
இதேபோல் செங்கல்பட்டில், சப் - கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில், வரும் 24ம் தேதி காலை 10:30 மணிக்கு, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் நடக்கிறது. விவசாயிகள் பங்கேற்று, மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.