/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் ஏரி கலங்கல் சேதம் நீர் வீணாவதால் விவசாயிகள் கவலை
/
சித்தாமூர் ஏரி கலங்கல் சேதம் நீர் வீணாவதால் விவசாயிகள் கவலை
சித்தாமூர் ஏரி கலங்கல் சேதம் நீர் வீணாவதால் விவசாயிகள் கவலை
சித்தாமூர் ஏரி கலங்கல் சேதம் நீர் வீணாவதால் விவசாயிகள் கவலை
ADDED : ஜன 04, 2025 01:14 AM

சித்தாமூர்:மதுராந்தகம் ஒன்றியம், நெட்ரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாமூர் கிராமத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது.
இந்த ஏரியின் வாயிலாக, 200 ஏக்கர் பரப்பளவு வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது.
மழைக்காலத்தில் ஏரி முழு கொள்ளளவை எட்டிய பின், உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேறும்.
தற்போது, ஏரியின் கலங்கல் பகுதி பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளதால், ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால், விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமல் போகும் என, விவசாயிகள் தவிக்கின்றனர்.
கோடை காலத்தில், இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள கலங்கல் பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

