/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சொத்து தகராறில் மகளை அரிவாளால் வெட்டிய தந்தை பதிலுக்கு சித்தியை வெட்டிய மகள்
/
சொத்து தகராறில் மகளை அரிவாளால் வெட்டிய தந்தை பதிலுக்கு சித்தியை வெட்டிய மகள்
சொத்து தகராறில் மகளை அரிவாளால் வெட்டிய தந்தை பதிலுக்கு சித்தியை வெட்டிய மகள்
சொத்து தகராறில் மகளை அரிவாளால் வெட்டிய தந்தை பதிலுக்கு சித்தியை வெட்டிய மகள்
ADDED : ஏப் 16, 2025 09:44 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே ஊரப்பாக்கத்தில், சொத்து தகராறில், அப்பா மகளையும், மகள் சித்தியையும் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊரப்பாக்கம், பிரியா நகரில், வாடகை வீட்டில் வசித்து வருபவர் செல்வராஜ், 56. இவரது மகள் தாட்சாயிணி, 37, திருமணமாகி, கணவர் டேவிட்ராஜ் உடன் வானுவம்பேட்டையில் வசித்து வருகிறார்.
செல்வராஜின் முதல் மனைவி இறந்து விட்டதால், அவர், செல்வி, 44 என்பவரை இரண்டாவது திருமணம் செய்து, ஊரப்பாக்கத்தில், வசித்து வருகிறார். செல்விக்கு முதல் கணவர் வாயிலாக பிறந்த மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில், செல்வராஜின் மகள் தாட்சாயிணி, ஊரப்பாக்கத்தில் உள்ள தந்தையின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு, தன் கணவருடன் வந்துள்ளார். அப்போது, சொத்து தகராறில், தன் தந்தையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த செல்வராஜ், வீட்டில் இருந்த கத்தியால், மகள் தாட்சாயிணியை சராமாரியாக வெட்டி உள்ளார்.
சுதாரித்த தாட்சாயிணி, தந்தையிடமிருந்து கத்தியை பிடுங்கி, 'இதற்கெல்லாம் காரணம் நீ தான்' என கூறி, செல்வியை கத்தியால் வெட்டி உள்ளார்.
இந்த சம்பவத்தில் தாட்சாயிணிக்கு தலை, மார்பு, கை ஆகிய இடங்களில் 18 வெட்டுகள் விழுந்துள்ளன. செல்விக்கு தலையில் வெட்டுகள் விழுந்தன.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன், இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாட்சாயிணி, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.