ADDED : ஜூலை 19, 2025 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே தாழம்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கலைவாணி, 36. இவர் சிறுசேரியில், தனியார் ஐ.டி., நிறுவனத்தில், கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்துவந்தார்.
இந்நிலையில், கலைவாணி நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பணியில் இருந்தபோது, ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து, தற்கொலை செய்தார்.
ஏகாட்டூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கலைவாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.