sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

துப்புறவு பணியாளர்களுக்கு கைரேகை பதிவு கட்டாயம்

/

துப்புறவு பணியாளர்களுக்கு கைரேகை பதிவு கட்டாயம்

துப்புறவு பணியாளர்களுக்கு கைரேகை பதிவு கட்டாயம்

துப்புறவு பணியாளர்களுக்கு கைரேகை பதிவு கட்டாயம்


ADDED : அக் 20, 2024 12:07 AM

Google News

ADDED : அக் 20, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்,:ஒப்பந்த நிறுவன துப்புறவு பணியாளர்களின் வருகை பதிவிற்காக, பேரூராட்சி நிர்வாகம் கைரேகை பதிவை கட்டாயமாக்கியது.

மாமல்லபுரம் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக, பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பை ஏராளமான குப்பை குவிந்து வருகிறது.

மேலும், வீடுகள், விடுதிகள், வர்த்தக கடைகள் ஆகியவற்றிலும் குப்பை குவிகிறது. இந்த குப்பையை தினமும் அகற்றவும், வீடுகள் உள்ளிட்டவற்றில் குப்பை சேகரிக்கவும், தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

இந்நிறுவனம், துப்புரவு ஊழியர்களை நியமித்து, குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் பணிபுரிவது தொடர்பாக, முறையான வருகை பதில் இல்லை.

இந்நிலையில், காலை 6:00 மணிக்கு பணிக்கு வருவதையும், பிற்பகல் 2:00 மணிக்கு பணி முடிந்து திரும்புவதையும் முறைப்படுத்த கருதி, பேரூராட்சி அலுவலகம், திடக்கழிவு மேலாண்மை வளாகம் ஆகிய இடங்களில், அவர்களின் கைரேகையை பதிவு செய்ய சாதனம் பொருத்தப்பட்டது. தினமும் காலை மற்றும் பிற்பகல் என, இரண்டு வேளையும் கைரேகை பதிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us