sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பிரிட்ஜ் பழுது நீக்கும் கடையில் தீ விபத்து

/

 பிரிட்ஜ் பழுது நீக்கும் கடையில் தீ விபத்து

 பிரிட்ஜ் பழுது நீக்கும் கடையில் தீ விபத்து

 பிரிட்ஜ் பழுது நீக்கும் கடையில் தீ விபத்து


ADDED : ஜன 01, 2026 05:04 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:பிரிட்ஜ், வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

திருப்போரூர் அடுத்த அம்மாபேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரகலாதன். 40, இவர் திருப்போரூர் - நெல்லிக்குப்பம் சாலையில் 'ஏசி' பிரிட்ஜ், வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை கடையில் தீ விபத்து ஏற்பட்டு, 200 அடி உயரத்திற்கு புகை மூட்டம் கிளம்பியது. கடை அருகே இருந்த டைப்பிங் சென்டர் , இருசக்கர வாகன வாட்டர் வாஷ் கடை, டீ கடை, அழகு நிலையம், உடற்பயிற்சி கூடத்தில் இருந்தவர்கள் அலரி அடித்து வெளியேறினர்.

தகவல் அறிந்து வந்த காலவாக்கம் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதில், 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின. இந்த தீவிபத்தால் அருகே இருந்த டீ கடை மற்றும் உடற்பயிற்சி கூடத்தின் கண்ணாடி உடைந்து சேதமானது.

காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

--------------------






      Dinamalar
      Follow us