sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லை சிற்ப வளாகங்களில் முதலுதவி மருந்துகள் அவசியம்

/

மாமல்லை சிற்ப வளாகங்களில் முதலுதவி மருந்துகள் அவசியம்

மாமல்லை சிற்ப வளாகங்களில் முதலுதவி மருந்துகள் அவசியம்

மாமல்லை சிற்ப வளாகங்களில் முதலுதவி மருந்துகள் அவசியம்


ADDED : பிப் 05, 2025 01:53 AM

Google News

ADDED : பிப் 05, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்மாமல்லபுரம் சிற்ப வளாகங்களில் கீழே விழுந்து காயமடையும் பயணியருக்காக, முதலுதவி சிகிச்சை மருந்துகள் வைக்க வேண்டுமென, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

மாமல்லபுரத்தில், பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு ஆகியவற்றை, சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.

சிற்ப வளாக பகுதிகளில், சமனற்ற பாறை குன்றுகளில் பயணியர் நடக்கும் போது, அடிக்கடி கால் இடறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.

இவ்வாறு காயமடையும் பயணியருக்கு, உடனே முதலுதவி சிகிச்சை அளிக்க, தொல்லியல் துறையினரிடம் முறையான மருந்துகள் இல்லை.

இதனால், பயணியருக்கு அதிக ரத்தம் வெளியேறி, மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் செல்லும் அவலம் தொடர்கிறது.

எனவே, சுற்றுலா பயணியர் நலன் கருதி, சிற்ப வளாக நுழைவுச்சீட்டு மையங்களில், முதலுதவி மருந்துகள் வைத்திருக்க வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us