sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சதுரங்கப்பட்டினத்தில் மீன் இறங்குதளம் மீனவர்கள் வரவேற்பு

/

சதுரங்கப்பட்டினத்தில் மீன் இறங்குதளம் மீனவர்கள் வரவேற்பு

சதுரங்கப்பட்டினத்தில் மீன் இறங்குதளம் மீனவர்கள் வரவேற்பு

சதுரங்கப்பட்டினத்தில் மீன் இறங்குதளம் மீனவர்கள் வரவேற்பு


ADDED : ஏப் 05, 2025 10:09 PM

Google News

ADDED : ஏப் 05, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்:சதுரங்கப்பட்டினத்தில் மீன் இறங்குதளம் அமைக்கவுள்ளதாக, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளதை, மீனவர்கள் வரவேற்றுள்ளனர்.

கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம் ஊராட்சிப் பகுதியில், சதுரங்கப்பட்டினம் வடக்கு, தெற்கு, மெய்யூர் ஆகிய மீனவர் பகுதிகள் உள்ளன.

மீனவர்கள், வாழ்வாதாரத்திற்கு கடலில் மீன் பிடிக்கின்றனர். மெய்யூர் துவங்கி, கல்பாக்கம் நகரிய எல்லை வரை நீளமாக அமைந்துள்ள இப்பகுதி கடற்கரை, பல ஆண்டுகளாக கடலரிப்பு பாதிப்பு உள்ளது.

மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்க இயலவில்லை. மீன்பிடி தொழில் மேம்பாட்டு வசதிகள் இல்லை.

இப்பகுதி கடலரிப்பை தடுத்து, மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக மீன் இறங்குதளம் அமைக்குமாறு, அரசிடம் மீனவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் இங்கு மீன்பிடி இறங்குதளம் அமைக்கவுள்ளதாக, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை மீனவர்கள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us