sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கொளுத்தப்படும் மீன்பிடி வலைகள் கடப்பாக்கம் மீனவர்கள் அதிருப்தி

/

கொளுத்தப்படும் மீன்பிடி வலைகள் கடப்பாக்கம் மீனவர்கள் அதிருப்தி

கொளுத்தப்படும் மீன்பிடி வலைகள் கடப்பாக்கம் மீனவர்கள் அதிருப்தி

கொளுத்தப்படும் மீன்பிடி வலைகள் கடப்பாக்கம் மீனவர்கள் அதிருப்தி


ADDED : ஜன 29, 2024 04:25 AM

Google News

ADDED : ஜன 29, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர் : செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் குப்பத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, கடலில் விசைப்படகு மூலம் மீன் பிடிப்பதே பிரதான தொழில்.

மீனவர்கள் அனைவரும், கடற்கரை ஓரத்தில் தனித்தனியே குடிசை அமைத்து, தங்களது மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களை வைத்து விட்டு செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு, அனைவரும் தங்களது வலைகளை குடிசைகளில் வைத்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த பனையூர் மீனவர்கள், கடப்பாக்கம் குப்பம் கடற்கரைப் பகுதியில் குடிசை தீப்பற்றி எரிவதைக் கண்டு, கடப்பாக்கம் குப்பம் மீனவர்களுக்கு, மொபைல் போன் மூலம் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மீனவர்கள், கடப்பாக்கம் குப்பம் பகுதியை சேர்ந்த செந்தில், 32,லோகு, 35, உள்ளிட்ட 10 மீனவர்களுக்கு சொந்தமான வலை வைக்கும் இரண்டு குடிசைகள் எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

கடற்கரையில் பலத்த காற்று வீசியதால், தீ மலமலவென பரவி, இரண்டு குடிசைகளில் இருந்த மீன்பிடி வலைகள் முழுதும் எரிந்து நாசமாகின. 30 லட்சம் மதிப்புடைய வலை எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

சூணாம்பேடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த வாரம் இதே இடத்தில், வேல்பழனி, 52, என்பவருக்கு சொந்தமான 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய மீன்பிடி வலை தீயில் எரிந்து நாசமானது.

மர்ம நபர்கள் இரவு நேரத்தில் திட்டமிட்டு, ஒரு பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி வலைகளுக்கு மட்டும் தீவைப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அடுத்தடுத்து மீன் வலைகள் தீப்பற்றி எரிவது, அப்பகுதி மீனவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us