sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஓதியூர் ஏரியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

/

ஓதியூர் ஏரியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

ஓதியூர் ஏரியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

ஓதியூர் ஏரியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்


ADDED : டிச 21, 2024 11:30 PM

Google News

ADDED : டிச 21, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில், 275 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.

சுற்றுப் பகுதிகளிலிருந்து 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், ஓதியூர் ஏரிக்கு வந்து சேர்ந்து, பின் பகிங்ஹாம் கால்வாய் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.

ஆண்டுதோறும் பருவமழை முடிந்த பின், டிசம்பர் மாதத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கை, ஆஸ்திரேலியா, மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து, இந்த ஏரிக்கு பறவைகள் வருகின்றன. இந்த ஏரியில் உள்ள மீன் குஞ்சுகள், புழு, நத்தை, சிப்பிகளை உணவாக விரும்பி சாப்பிடுகின்றன.

பின், இனப்பெருக்கம் செய்து ஏப்ரல், மே மாதத்தில் சொந்த நாடுகளுக்கு திரும்பச் செல்வது வழக்கம்.

கடந்தாண்டு, மதுராந்தகம் வனச்சரக அலுவலகம் வாயிலாக பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் நீர்காகம், ஊசிவால் வாத்து, அரிவாள் மூக்கன், நீர்த்தாழி, பிளமிங்கோ, கரண்டிமூக்கு கொக்கு, நீர்ப்பறவை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட வகையான, 15,000க்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்தது தெரிந்தது.

இங்கு அதிகபட்சமாக ஊசிவால் வாத்து, செங்கால் நாரை, பூநாரை, நெடுங்கால் உள்ளான், சின்ன கோட்டான் மற்றும் பெரிய கோட்டான் போன்ற பறவைகள் வருகை தரும்.

இந்நிலையில் பருவமழை துவங்கி ஓதியூர் ஏரி நிரம்பியுள்ள நிலையில், பிளமிங்கோ மற்றும் சிரவி பறவைகளின் வரத்து துவங்கி உள்ளது.

தற்போது, 1,000க்கும் மேற்பட்ட சிரவி மற்றும் நுாறுக்கும் மேற்பட்ட பிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன.






      Dinamalar
      Follow us