sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

/

வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்


ADDED : ஜன 13, 2025 01:11 AM

Google News

ADDED : ஜன 13, 2025 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும், வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

மதுராந்தகம் அருகே, உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

சரணாலயம் அமைந்துள்ள இந்த ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்ட ஏரி, முழு கொள்ளளவு நிரம்பியது.

இந்நிலையில் தற்போது பங்களாதேஷ், பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அதிக அளவிலான பறவைகள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன.

வழக்கமாக, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், குளிர்காலத்தில் பறவைகள் வரத் துவங்குகின்றன.

டிச., முதல் பிப்., மாதங்கள் பறவைகளின் வருகை அதிகமாக இருக்கும்.

மார்ச், ஏப்., மே மாதத்தின் கடைசி வாரத்தில், பறவைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும்.

அந்த வகையில் தற்போது கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தைக்குத்தி நாரை, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான் மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வணண நாரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்துள்ளன.

30,000க்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து வருகின்றன.

தற்போது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

'டெலஸ்கோப்' பழுது


வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளைக் காண, கண்காணிப்பு கோபுரத்தில், கடந்தாண்டு 'டெலஸ்கோப்' அமைக்கப்பட்டிருந்தது.அது பழுதடைந்து உள்ளதால், இந்தாண்டு துவக்கம் முதல் தற்போது வரை, டெலஸ்கோப் அமைக்கப்படாமல் வெறிச்சோடி உள்ளது
இதனால், பறவைகள் சரணாலயத்திற்கு அருகே, கடைகளில் விற்பனை செய்யப்படும் டெலஸ்கோப்பை, ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தி, சுற்றுலா பயணியர் வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது.இதை தவிர்க்கும் வகையில், கண்காணிப்பு கோபுரத்தில் நவீன டெலஸ்கோப் பொருத்த வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை உள்ளதால், அதிக சுற்றுலா பயணியர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, கண்காணிப்பு கோபுரத்தில் டெலஸ்கோப் பொருத்த வேண்டும் என, சுற்றுலா பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








      Dinamalar
      Follow us