sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின் இணைப்பு வழங்க லஞ்சம் 'மாஜி' அதிகாரிக்கு 3 'ஆண்டு'

/

மின் இணைப்பு வழங்க லஞ்சம் 'மாஜி' அதிகாரிக்கு 3 'ஆண்டு'

மின் இணைப்பு வழங்க லஞ்சம் 'மாஜி' அதிகாரிக்கு 3 'ஆண்டு'

மின் இணைப்பு வழங்க லஞ்சம் 'மாஜி' அதிகாரிக்கு 3 'ஆண்டு'


ADDED : டிச 31, 2024 01:07 AM

Google News

ADDED : டிச 31, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம், இந்திரா அவென்யூ, அசோக் நகரைச் சேர்ந்தவர் பரணிதரன். இவர், தன் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க கேட்டு, கடந்த 2010ல், ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அப்போது, மின்வாரிய செயற்பொறியாளராக பணிபுரிந்த பஞ்சாட்சரத்தை, கடந்த 2010 நவ., 15ம் தேதி நேரில் சந்தித்து கேட்டுள்ளார். பஞ்சாட்சரம், 10,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.

உடனே பரணிதரன், காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், 2010 நவ., 19ம் தேதி ரசாயனம் தடவிய 10,000 ரூபாயை பரணிதரனிடம் கொடுத்து அனுப்பினர்.

லஞ்ச பணத்தை பரணிதரனிடம் இருந்து, பஞ்சாட்சரம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி வசந்தகுமார், பஞ்சாட்சரத்திற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us