/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மொபைல் போன் பறிப்பு சிறுவன் உட்பட நால்வர் கைது
/
மொபைல் போன் பறிப்பு சிறுவன் உட்பட நால்வர் கைது
ADDED : செப் 27, 2024 07:57 PM
சித்தாமூர்,:சித்தாமூர் அடுத்த மழுவங்கரணை, தேரடி தெருவை சேர்ந்தவர் நாராயணன், 45. நேற்று முன்தினம் காலை, விவசாய வேலைக்காக தனக்கு சொந்தமான வயல்வெளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், நாராயணனை மிரட்டி, அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து, நாராயணன் சித்தாமூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 'சிசிடிவி' கேமாரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், மழுவங்கரணையை சேர்ந்த வசந்த், 21, கிஷோர், 18, கீழ்மருவத்துாரை சேர்ந்த சசிதரன், 18, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
சித்தாமூர் போலீசார் அவர்களை கைது செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூவரை மதுராந்தகம் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை, செங்கல்பட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.