ADDED : ஜூலை 11, 2025 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில், ஆனி மாத பவுர்ணமி விழா நேற்று விமரிசையாக நடந்தது.
மக்கள் நலமுடன் வாழ, ஞானலிங்கத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பின், பகல் 12:00 மணியளவில், மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து, திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.