sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வனப்பகுதியில் கழிவுகள் குவிப்பு மறைமலைநகர் அருகே அட்டூழியம்

/

வனப்பகுதியில் கழிவுகள் குவிப்பு மறைமலைநகர் அருகே அட்டூழியம்

வனப்பகுதியில் கழிவுகள் குவிப்பு மறைமலைநகர் அருகே அட்டூழியம்

வனப்பகுதியில் கழிவுகள் குவிப்பு மறைமலைநகர் அருகே அட்டூழியம்


ADDED : பிப் 03, 2025 11:44 PM

Google News

ADDED : பிப் 03, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், மறைமலைநகர் அடுத்த கோகுலாபுரம் -- கடம்பூர் சாலையின் இருபுறமும், காப்புக்காடுகள் உள்ளன. இதில் மான், முயல், மயில் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் உள்ளன.

மேலும், பல வகையான அரிய வகை மரங்களும் உள்ளன. இங்கு கடம்பூர், கருநிலம், கொண்டமங்கலம், கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மறைமலைநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீர், லாரிகளில் கொண்டுவந்து கொட்டப்படுகிறது.

இதனால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

மறைமலைநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் சூழலில், வனப்பகுதியில் பழைய வீட்டு உபயோக பொருட்கள், தொழிற்சாலை கழிவுநீர் உள்ளிட்டவை தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன.

இவை மழைக்காலங்களில் கடம்பூர், கருநிலம் ஏரிகளில் நேரடியாக கலக்கின்றன.

இதன் காரணமாக, புறநகரில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இவற்றை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us