/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கருங்குழி கோவில் குளத்தில் குப்பை குவிக்கும் அவலம்
/
கருங்குழி கோவில் குளத்தில் குப்பை குவிக்கும் அவலம்
கருங்குழி கோவில் குளத்தில் குப்பை குவிக்கும் அவலம்
கருங்குழி கோவில் குளத்தில் குப்பை குவிக்கும் அவலம்
ADDED : பிப் 06, 2025 12:54 AM

மதுராந்தகம்,:கருங்குழி பெரியபாளையத்தம்மன் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சி 4வது வார்டில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவில் குளம் முழுதும் ஆகாய தாமரை மற்றும் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது.
தண்ணீர் தெரியாதபடி ஆகாய தாமரை படர்ந்து உள்ளதால், கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது.
குளக்கரையை சுற்றி முட்புதர் வளர்ந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய இந்த குளம், தற்போது பயன்பாடு இல்லாமல், குப்பை கொட்டும் பகுதியாக மாறி உள்ளது.
நிலத்தடி நீராதாரத்தை காக்க, குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும்.
மதுராந்தகம் -- திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலை ஓரம் இக்குளம் உள்ளதால், குளக்கரையை சுற்றி நிழல் தரும் மரங்கள் வளர்த்து, நடைபாதை பூங்கா ஏற்படுத்தி தர வேண்டும்.
குளத்தின் உள்பகுதியை சீரமைத்து, அதில் குவிந்துள்ள கழிவுகளை அகற்ற, பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.