sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கலெக்டர் அலுவலக நிறுத்தத்தில் கூட நிற்காத அரசு பேருந்துகள்

/

கலெக்டர் அலுவலக நிறுத்தத்தில் கூட நிற்காத அரசு பேருந்துகள்

கலெக்டர் அலுவலக நிறுத்தத்தில் கூட நிற்காத அரசு பேருந்துகள்

கலெக்டர் அலுவலக நிறுத்தத்தில் கூட நிற்காத அரசு பேருந்துகள்


ADDED : அக் 09, 2025 03:21 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில், அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

நிழற்குடை இந்த அலுவலகங்களுக்கு, அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு தேவைக்கு, பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் வசதிக்காக, செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலை மற்றும் மதுராந்தகம் - செங்கல்பட்டு சாலையில், பயணிகள் நிழற்குடைகள் கட்டப்பட்டன.

அதன்பின், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு, பேருந்துகள் நிற்காமல் செல்கிறது.

ஆனால், வழக்கம்போல் மலையடி வேண்பாக்கம் ஐ.டி.ஐ., பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்துகள் நின்று செல்கின்றன.

இங்கிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். இதேபோன்று, பணி முடிந்து வீட்டிற்குச் செல்லும்போதும், மேற்கண்ட நிறுத்தத்திற்கு வந்து, பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

பேருந்து நிறுத்தம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பாக இயக்கப்படும் அனைத்து மண்டல பேருந்துகளும், கலெக்டர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில், கலெக்டர் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரையும், ஏற்றியும், இறக்கியும் விட வேண்டும்.

செங்கல்பட்டு கிளை மேலாளர், உதவி பொறியாளர் ஆகியோர் காலை, மாலை நேரங்களில், தனி கவனம் செலுத்த வேண்டும் என, பொது மேலாளர், கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.

நடவடிக்கை இந்த உத்தரவை, அரசு பேருந்து ஓட்டுனர்கள் கடைபிடிப்பதில்லை. வழக்கம்போல், ஐ.டி.ஐ.,பேருந்து நிறுத்தத்தில், கலெக்டர் அலுவலக பணியாளர்கள், பொதுமக்களை இறக்கியும், ஏற்றியும் செல்கின்றனர்.

எனவே, கலெக்டர் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி, கலெக்டர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில், அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us