/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
23ல் அரசு அலுவலகங்கள் செயல்படும்
/
23ல் அரசு அலுவலகங்கள் செயல்படும்
ADDED : ஆக 04, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு,செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு அலுவலங்கள் வரும் 23ம் தேதி செயல்படும், என, கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆடிப்பூர விழா கடந்த 28ம் தேதி நடந்தது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து, அதற்கு பதிலாக வரும் 9ம் தேதி, பணிநாளாக அறிவிக்கப்பட்டது. தற்போது, நிர்வாக காரணங்களால், 9ம் தேதிக்கு பதில் 23ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.