/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மெய்யூர் ஊராட்சியில் அரசு சிறப்பு முகாம்
/
மெய்யூர் ஊராட்சியில் அரசு சிறப்பு முகாம்
ADDED : செப் 13, 2025 01:19 AM

மதுராந்தகம்:மெய்யூர் ஊராட்சியில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், கிராம மக்கள் 500க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினர்.
மெய்யூர் ஊராட்சியில், அதன் தலைவர் தமிழரசன் தலைமையில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் மூலமாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன.
வீட்டுமனைப் பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொகுப்பு வீடு, மின் இணைப்பு, ஆதார் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப அட்டை என, பல்வேறு கோரிக்கைகளை மனுவாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மக்கள் வழங்கினர். 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.