/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் கவர்னர் சுற்றுலா
/
மாமல்லையில் கவர்னர் சுற்றுலா
ADDED : நவ 16, 2025 02:14 AM

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பல்லவர் சிற்பங்களை, தமிழக கவர்னர் ரவி கண்டு ரசித்தார்.
தமிழக கவர்னர் ரவி, மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பல்லவர் கால பாறை சிற்பங்களை, குடும்பத்தினருடன் அவ்வப்போது கண்டு ரசிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை 4:00 மணியளவில், குடும்பத்தினருடன் மாமல்லபுரம் வந்தார்.
கடற்கரை கோவில் பகுதியில், மாவட்ட கலெக்டர் சினேகா, செங்கல்பட்டு பொறுப்பு போலீஸ் எஸ்.பி., சண்முகம் ஆகியோர், அவரை வரவேற்றனர்.
அப்போது கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு ஆகிய சிற்பங்களை கண்டு ரசித்து, 5:00 மணிக்கு சென்னை புறப்பட்டார்.
தொல்லியல் பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர் உடனிருந்தார். நகராட்சி நிர்வாகம் சாலை பகுதிகளை முறையாக பராமரிக்காத நிலையில், நேற்று கவர்னர் வருகையை ஒட்டி, அவசரமாக குப்பையை அகற்றி துாய்மைப்படுத்தியது.

