sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாம்பரம் மாநகராட்சியில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்

/

தாம்பரம் மாநகராட்சியில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்

தாம்பரம் மாநகராட்சியில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்

தாம்பரம் மாநகராட்சியில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்


ADDED : டிச 26, 2024 12:45 AM

Google News

ADDED : டிச 26, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,

தாம்பரத்தில், மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது.

கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மண்டலங்கள் வாரியாக, நடைபெற உள்ளது. இதில், முதல் கட்டமாக, மண்டலங்கள் 2 மற்றும் 4க்கு உட்பட்ட பகுதிகளில், மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம், வரும் 27 ம் தேதி, நடக்கிறது.

தாம்பரம் மேற்கு அம்பேத்கர் திருமண மண்டபத்தில், 32, 33, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 58, 59, 60, 61 ஆகிய வார்டுகளுக்கு, காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2 :30 மணிவரை.

குரோம்பேட்டை பிரதான சாலை, நியூகாலனி, மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், 9, 13, 14, 15, 16, 17,1 8, 19, 20, 21, 24, 26, 27, 28 ஆகிய வார்டுகளுக்கு, மாலை 3:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது. முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us