sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிப்காட் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அடாவடி வாகனங்களால் நெரிசல்

/

சிப்காட் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அடாவடி வாகனங்களால் நெரிசல்

சிப்காட் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அடாவடி வாகனங்களால் நெரிசல்

சிப்காட் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அடாவடி வாகனங்களால் நெரிசல்


ADDED : பிப் 17, 2025 01:31 AM

Google News

ADDED : பிப் 17, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலைநகர் சிப்காட் பகுதியில், 250க்கும் மேற்பட்ட வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலைகள் உள்ளன.

இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளம்பெண்கள், ஆண்கள் வாடகைக்கு தங்கி, பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தொழிற்சாலைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இந்த தொழிற்சாலைகளுக்கு இரு சக்கர வாகங்களில் பணிக்கு வருவோர், தங்களின் வாகனங்களை தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்தாமல், தொழிற்சாலை முன்பக்கம் சாலையை ஒட்டி காலியாக உள்ள இடத்தில் நிறுத்துகின்றனர்.

இதனால், தொழிற்சாலைகளுக்கு உதிரிபாகங்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள், தொழிலாளர்களை ஏற்றி வரும் தனியார் பேருந்துகளை திருப்புவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்து அபாயம் நிலவுவதால், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

மறைமலை நகர் சிப்காட் பகுதி அமைக்கும் போதே, கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு, பெரிய அளவிலான சாலைகள் அமைக்கப்பட்டன.

தற்போது இச்சாலை, அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, இங்குள்ள பெரும்பாலான தொழிற்சாலை நிர்வாகங்கள், ஹெல்மெட் அணியாமல் வரும் பணியாளர்களின் வாகனங்களை தொழிற்சாலை வளாகத்தின் உள்ளே அனுமதிப்பது இல்லை.

இதன் காரணமாக தொழிலாளர்கள் சாலை ஓரம் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதுபோன்று நிறுத்தப்படும் வாகனங்களால் இந்த பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சாலை ஓரம் மற்றும் நடை பாதைகளில் வாகனங்களை நிறுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us