நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியிலுள்ள பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, பாலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ரெட்டிப்பாளையம் பகுதியில் சிலுவை அந்தோணி,38, என்பவரின் கடையில், போலீசார் சோதனை செய்து, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 10,000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சிலுவை அந்தோணியை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.