sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அனந்தமங்கலம் நெற்களம் விவசாயிகளிடம் ஒப்படைப்பு

/

அனந்தமங்கலம் நெற்களம் விவசாயிகளிடம் ஒப்படைப்பு

அனந்தமங்கலம் நெற்களம் விவசாயிகளிடம் ஒப்படைப்பு

அனந்தமங்கலம் நெற்களம் விவசாயிகளிடம் ஒப்படைப்பு


ADDED : செப் 26, 2024 09:22 PM

Google News

ADDED : செப் 26, 2024 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, அனந்தமங்கலம் ஊராட்சி உள்ளது. இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழில். இப்பகுதி விவசாயிகள் நெல், மணிலா, உளுந்து, எள் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

மழைக்காலங்களில் நெல் மற்றும் மணிலா போன்றவற்றை உலர்த்தி, பாதுகாப்பதில் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

அதனால், கதிரடிக்கும் களம் அமைக்க வலியுறுத்தி, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவாக, தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், 2024 - 25ம் நிதி ஆண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 8.80 லட்சம் ரூபாய் மதிப்பில், செல்லியம்மன் கோவில் அருகே, புதிதாக கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டது.

அதற்கான அனைத்து பணிகளும் முடிந்து, நேற்று விவசாயிகளின் பயன்பாட்டிற்கு, கதிர் அடிக்கும் களம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us