/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மலையடிவாரத்தில் கொட்டப்படும் உணவு கழிவுகளால் சுகாதார சீர்கேடு
/
மலையடிவாரத்தில் கொட்டப்படும் உணவு கழிவுகளால் சுகாதார சீர்கேடு
மலையடிவாரத்தில் கொட்டப்படும் உணவு கழிவுகளால் சுகாதார சீர்கேடு
மலையடிவாரத்தில் கொட்டப்படும் உணவு கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜன 18, 2025 01:47 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம், பெரும்பேர் கண்டிகை ஊராட்சி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெரும்பேர் கண்டிகை செல்லும் வழியில், வஜ்ஜிரகிரி மலை உள்ளது.
இதில், மான், காட்டுப் பன்றி, நரி, முயல், உடும்பு, மயில் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
இம்மலையடிவாரத்தில் தத்தாத்ரேயே கோவில் உள்ளது.
இக்கோவில் அருகே, மலையடிவாரத்தில் உள்ள புதர்களில் கோழி இறைச்சி கழிவுகள், உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள் என, குப்பை கழிவுகளை, மர்ம நபர்கள் கொட்டி வருகின்றனர்.
இதை உண்பதற்காக, வனவிலங்குகள், நாய், பன்றி உலா வருவதால், தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்குகின்றன.
க்ஷஅருகிலுள்ள உணவகங்களில் இருந்து கழிவுநீர், வாகனங்களில் கொண்டுவரப்பட்டு, கழிவுநீரை அப்பகுதியில் கொட்டி செல்கின்றனர்.
இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடுஏற்படுகிறது.
இதனால், அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் மூச்சு திணறல், சுவாசப் பிரச்சனைகளால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
நாள்தோறும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் மலை போல குவிந்து வருகின்றன.
எனவே, அப்பகுதியில் குப்பைகளை கொட்டாதவாறு, இரும்பு கம்பி வேலி அமைத்து, வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
குப்பைகளை முறையாக அகற்ற, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.