sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 அணுசக்தி மைய சாலையில் குப்பை குவியல் சுகாதார சீர்கேட்டால் பகுதி மக்கள் அவதி

/

 அணுசக்தி மைய சாலையில் குப்பை குவியல் சுகாதார சீர்கேட்டால் பகுதி மக்கள் அவதி

 அணுசக்தி மைய சாலையில் குப்பை குவியல் சுகாதார சீர்கேட்டால் பகுதி மக்கள் அவதி

 அணுசக்தி மைய சாலையில் குப்பை குவியல் சுகாதார சீர்கேட்டால் பகுதி மக்கள் அவதி


ADDED : டிச 26, 2025 05:42 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்:சதுரங்கப்பட்டினம், அணுசக்தி மைய சாலை பகுதியில், குப்பை குவிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம் ஊராட்சிப் பகுதியில், அணுசக்தி துறையின் கல்பாக்கம் நகரியம் - அணுசக்தி மைய வளாகம் இடையே, 2 கி.மீ., சாலை உள்ளது.

கல்பாக்கம் நகரிய குடியிருப்பு பகுதியில் இருந்து, அணுசக்தி மையத்திற்கு, அறிவியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தினமும் சென்று திரும்புகின்றனர்.

சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதியினர், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சதுரங்கப்பட்டினம், மெய்யூர் ஆகிய பகுதிகளில், மக்கள், கடைக்காரர்கள், சாலையை ஒட்டி, பல ஆண்டுகளாக குப்பை குவித்து வருகின்றனர்.

ஊராட்சி நிர்வாகம், குப்பையை மேடாக உயரவிட்டு, பல நாட்கள் கடந்தே அகற்றுகிறது. அங்கேயே எரித்தும் அழிக்கின்றனர்.

சுகாதார சீர்கேடு, துர்நாற்றம், நோய் பரவும் அபாயம் என உள்ளதால். அவ்வழியே கடந்து செல்வோர், அவதிப்படுகின்றனர். சாலையில் புகை பரவி, விபத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கவிழ்ந்து காயமடைகின்றனர். எனவே வட்டார வளர்ச்சி நிர்வாகம், அணுசக்தி துறையுடன் இணைந்து, சாலையை பராமரிக்க, இப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us