sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உயர் நீதிமன்றம் உத்தரவு எதிரொலி பாபுராயன்பேட்டை கோவிலில் ஆய்வு

/

உயர் நீதிமன்றம் உத்தரவு எதிரொலி பாபுராயன்பேட்டை கோவிலில் ஆய்வு

உயர் நீதிமன்றம் உத்தரவு எதிரொலி பாபுராயன்பேட்டை கோவிலில் ஆய்வு

உயர் நீதிமன்றம் உத்தரவு எதிரொலி பாபுராயன்பேட்டை கோவிலில் ஆய்வு


ADDED : நவ 22, 2024 12:30 AM

Google News

ADDED : நவ 22, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:“தேசிய பாரம்பரிய சின்னமான விஜய வரதராஜ பெருமாள் கோவிலை பாதுகாக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் முனைப்பு காட்டாதது, துரதிர்ஷ்டவசமானது.

“கோவில் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை, முறையாகப் பின்பற்றாவிட்டால் அறநிலையத்துறை கமிஷனரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும்,” என, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் எச்சரித்தது.

இதையடுத்து, நேற்று பாபுராயன்பேட்டை விஜய வரதராஜ பெருமாள் கோவிலில், இணை ஆணையர் குமரகுரு, செங்கல்பட்டு உதவி ஆணையர் ராஜலட்சுமி, காஞ்சிபுரம் உதவி கோட்ட பொறியாளர் மனோகரன், செங்கல்பட்டு உதவி பொறியாளர் முருகவேல், அச்சிறுபாக்கம் கோவில் செயல் அலுவலர் தமிழரசி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பின், கோவில் உட்பிரகார வளாகத்தில் உள்ள செடி, கொடிகள் மற்றும் புதர்களை ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கோவில் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என, அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us