sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பயன்பாடற்ற குடிநீர் தொட்டி விரைந்து சீரமைக்க எதிர்பார்ப்பு

/

பயன்பாடற்ற குடிநீர் தொட்டி விரைந்து சீரமைக்க எதிர்பார்ப்பு

பயன்பாடற்ற குடிநீர் தொட்டி விரைந்து சீரமைக்க எதிர்பார்ப்பு

பயன்பாடற்ற குடிநீர் தொட்டி விரைந்து சீரமைக்க எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 28, 2025 11:40 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்,இரும்புலி ஊராட்சியில், பராமரிப்பின்றி உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

செய்யூர் -- வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, இரும்புலி ஊராட்சிக்கு வரும் சாலை உள்ளது.

இங்கு, இரும்புலி ஊராட்சி பள்ளிக்கூட கட்டடம் அருகே வசிப்போரின் குடிநீர் தேவைக்காக, 5 ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்றி வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது, கடந்த சில ஆண்டுகளாக, இந்த குடிநீர் தொட்டி பயன்பாடின்றி, பழுதடைந்து உள்ளது.மக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் குடிநீரின்றி பலரும் சிரமப்படுகின்றனர்.

எனவே, பயன்பாடற்று உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us