/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடு புகுந்து 5 சவரன் நகை திருட்டு
/
வீடு புகுந்து 5 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 30, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர்:சித்தாமூர் அருகே பொலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் திலகம், 50. இவர், நேற்று காலை 9:00 மணிக்கு, வீட்டின் கதவை பூட்டிவிட்டு, நுாறு நாள் வேலைக்கு சென்று உள்ளார்.
அதன்பின், வேலை முடிந்து மாலை 3:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த திலகம், சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின், சித்தாமூர் போலீசார் வழக்கு பதிந்து, வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.