sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மனைவியை கொன்ற வழக்கு கணவருக்கு ஆயுள் தண்டனை

/

மனைவியை கொன்ற வழக்கு கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொன்ற வழக்கு கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொன்ற வழக்கு கணவருக்கு ஆயுள் தண்டனை


ADDED : டிச 17, 2024 11:46 PM

Google News

ADDED : டிச 17, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:மனைவியை கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை, பள்ளிக்கரணை பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 48; தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி மஹாலட்சுமி என்கிற ஜோஸ்பின்மேரி, 40. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 2018 அக்., 12ம் தேதி, குடிபோதையில் வீட்டிற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி, நடத்தையில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, மனைவியிடம் தகராறு செய்தார். மேலும் ஆத்திரமடைந்த அவர், காய்கறி வெட்டும் கத்தியால், மஹாலட்சுமியை குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்து, பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார்.

வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், 6,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி எழிலரசி, தீர்ப்பளித்தார்.

அதன் பின், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கிருஷ்ணமூர்த்திக்கு உடல் பரிசோதனை செய்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us