sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கள்ளத்தனமாக மது விற்பனை சிங்கபெருமாள் கோவிலில் ஜோர்

/

கள்ளத்தனமாக மது விற்பனை சிங்கபெருமாள் கோவிலில் ஜோர்

கள்ளத்தனமாக மது விற்பனை சிங்கபெருமாள் கோவிலில் ஜோர்

கள்ளத்தனமாக மது விற்பனை சிங்கபெருமாள் கோவிலில் ஜோர்


ADDED : ஜன 20, 2025 01:40 AM

Google News

ADDED : ஜன 20, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோவில், ஸ்ரீவாரி நகர் பகுதியில், தனியார் கட்டடத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது.

இந்த கடை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்ததால், கடையை அகற்ற வேண்டும் என, பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு இந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.

இந்நிலையில், சமீப காலமாக இந்த பகுதியில், 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடையை ஒட்டி, கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.

மறைமலைநகர் அண்ணா சாலை, கோவிந்தாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் மது விற்பனை மற்றும் சாலை ஓரம் அமர்ந்து மது அருந்துவோரை, போலீசார் கண்டுகொள்வதில்லை.

தற்போது ஸ்ரீவாரி நகர் பகுதியில், டாஸ்மாக் விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, எப்போதும் காலை மற்றும் இரவு நேரங்களில், கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து வருகின்றனர்.

200 ரூபாய் சரக்கு பாட்டில்களை, 300 முதல் 350 ரூபாய் என விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக, சிப்காட் பகுதிக்கு வரும் வெளியூர் டிரைவர்கள், கூலித் தொழிலாளர்களுக்கு காலையிலேயே மது கிடைப்பதால், பணிக்குச் செல்லாமல் மது அருந்த சென்று விடுகின்றனர். இதனால், பலரது குடும்பம் பாதிக்கப்படுகிறது. கள்ளத்தனமாக மது விற்கப்படுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us