sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரசு சிற்றுண்டி விடுதிக்கு ரூ.ஐந்து லட்சம் வருவாய்

/

அரசு சிற்றுண்டி விடுதிக்கு ரூ.ஐந்து லட்சம் வருவாய்

அரசு சிற்றுண்டி விடுதிக்கு ரூ.ஐந்து லட்சம் வருவாய்

அரசு சிற்றுண்டி விடுதிக்கு ரூ.ஐந்து லட்சம் வருவாய்


ADDED : ஜன 23, 2025 12:40 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம், இந்திய நாட்டிய விழாக்கால அரசு சிற்றுண்டி விடுதி, ஐந்து லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கடற்கரை விடுதி, மாமல்லபுரத்தில் இயங்குகிறது.

அதன் நிர்வாகம், இந்திய நாட்டிய விழாவின் போது, விழாக்கால சிற்றுண்டி விடுதியை, பல ஆண்டுகளாக நடத்துகிறது.

அதன்படி, இந்தாண்டு கடற்கரை கோவில் அருகில், கடந்த டிச., 22 - ஜன., 20ல் இந்திய நாட்டிய விழா நடந்தது. தினசரி மாலை, பாரம்பரிய நாட்டியங்கள், கிராமிய கலைகள் நிகழ்த்தப்பட்டன.

இதையடுத்து விடுதி நிர்வாகம், அதன் கூடுதல் வருவாய் கருதி, சிற்றுண்டி விடுதி நடத்தியது. தோசை உள்ளிட்ட சிற்றுண்டி உணவுகள், சமோசா உள்ளிட்ட தின்பண்டங்கள், தேனீர் உள்ளிட்டவற்றை விற்பனை செய்தது.

பள்ளிகள் அரையாண்டு விடுமுறை காரணமாக, பயணியர் திரண்ட சூழலில், விற்பனையும் களைகட்டியது. இந்த வகையில் மொத்தம், ஐந்து லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக, சிற்றுண்டி விடுதி நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us